Site icon Tamil News

டியாகோ கார்சியா தீவில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களின் பரிதாப நிலை

சுமார் 2 வருடங்களாக டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12 இலங்கைக் குடியேற்றவாசிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு காரணங்களுக்காக தீவுகளுக்கு அருகிலுள்ள கடல் எல்லையில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோர் இந்த பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் கடைப்பிடிக்கப்படும் கடுமையான விதிமுறைகளாலும், விடுதலை நேரம் குறித்த நிச்சயமற்ற தன்மையாலும், இலங்கையர்கள் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர்களில் ஒரு பெண் தான் இந்த முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version