Site icon Tamil News

ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் : பதற்றத்தில் பயணிகள்!

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஹூஸ்டன் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விலகியதால் பதற்றம் நீட்டித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த விமானத்தில் 160 பயணிகளுடன், 06 பணியாளர்கள் பயணித்துள்ள நிலையில் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் தரைக்கு அருகே அதன் ஒரு இறக்கையுடன் ஒரு பக்கமாக சாய்ந்திருப்பதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

2477 என்ற விமானம், டென்னசி, மெம்பிஸ் நகரிலிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஹூஸ்டனின் புஷ் இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version