Site icon Tamil News

விமான நிலையங்களின் சில சேவைகளில் தனியாரை ஈடுபடுத்த திட்டம்!

விமான நிலையங்களில் தரையை  கையாளுதல், கேட்டரிங் மற்றும் விமான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் தனியார் துறையை ஈடுபடுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜெயகாந்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்த சேவைகள் தற்போது அரச ஏகபோகமாக உள்ளது.

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் மேற்கூறிய சேவைகளை வழங்குவதற்கு தனியார் தரப்பினரை அழைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது” எனக் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், இலங்கை ஏற்கனவே விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை தாராளமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version