Site icon Tamil News

ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்துள்ள புகைப்படம்!

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் கடந்த 02 ஆம் திகதி அனுப்பப்பட்ட ‘ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ரொக்கெட்டில் இருந்து ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்று புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  விண்கலத்தின் சுற்றுவட்டபாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலா மற்றும் பூமியின் புகைப்படம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Exit mobile version