Site icon Tamil News

அமெரிக்காவில் 100 அடி உயரத்தில் வௌவால்களை போல் தலைகீழாக தொங்கிய மக்கள்!

அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் சவாரி செய்யும்போது 100 அடியில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த மக்களை மீட்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.

AtmosFEAR சவாரி நிறுத்தப்பட்ட பிறகு, முன்னெச்சரிக்கையாக மருத்துவ நிலையில் இருந்த ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று போர்ட்லேண்டில் உள்ள ஓக்ஸ் கேளிக்கை பூங்கா, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

1905 ஆம் ஆண்டு முதன்முதலில் திறக்கப்பட்ட ஓக்ஸ் பூங்காவில் இந்த சவாரி மிகவும் பிரபலமானதாகும்.

Exit mobile version