Site icon Tamil News

ஜனாதிபதி தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவதற்கு மக்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்: ராமலிங்கம் சந்திரசேகரன்

மக்கள் ஆணையில்லாத ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டை தாரை வார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன்.தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

”மக்களை மேலும் பொருளாதார ரீதியிலும் விலை ஏற்ற ம் போன்ற செயற்பாடுகள் மூலம் பாதிப்புக்கு உள்ளாக்கும் ஒரு ஜனாதிபதியாக காணப்படுகின்றார்.

மக்கள் வெகு சீக்கிரம் இவரை வீட்டுக்கு அனுப்பு நடவடிக்கையில் ஈடுபட ஆயத்தமாகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவதற்கு மக்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்.

அர களைய போராட்டம் மூலம் பின்பக்க கதவால் ஜனாதிபதியாக வந்தவர் இன்று எதிர்க்கட்சியின் மொத்த அணியினரை கூட்டிக்கொண்டு வெளிநாடு சென்றுள்ள்ளார் ” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version