Site icon Tamil News

ரயிலுக்காக காத்திருந்த பயணி உயிரிழப்பு

ஹட்டன் புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் ஏறுவதற்காக காத்திருந்த பயணி ஒருவர் இன்று (02) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் , 70 வயதான மஸ்கெலியா நல்லதன்னிய முல்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்.என தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலுக்காக காத்திருந்த வேளையிலேயே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அவர் உயிரிழக்கும் போது புகையிரத நிலையத்தில் இருக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

உயிரிழந்த பயணியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version