Site icon Tamil News

இந்தியாவில் 07 கட்டங்களாக இடம்பெறும் பாராளுமன்ற தேர்தல் : வாக்குபதிவுகள் ஆரம்பம்!

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19.04) தொடங்கி ஜூன் 1ம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் வாக்குபதிவு தொடங்கியுள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதேவேளை தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்ளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version