Site icon Tamil News

விண்ணை முட்டும் கடன் சுமையில் பாகிஸ்தான்

2027ஆம் ஆண்டுக்குள் மத்திய பட்ஜெட்டில் மாகாணங்களின் பங்கை 39.4 சதவீதத்தில் இருந்து 48.7 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் மூன்று ஆண்டு பொருளாதாரத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மொத்த கடன் தொகை 79,731 பில்லியன் ரூபாவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் நாட்டின் கடன் சுமையையும் எடுத்துக் காட்டுகிறது.

உள்நாட்டுக் கடன் தோராயமாக ரூ.7,671 பில்லியனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதேவேளை வெளிநாட்டுக் கடன் ரூ.818 பில்லியனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுநிதியளிப்பு மற்றும் வட்டி விகித இடர் மேலாண்மை உள்ளிட்ட கடன் சுமையை குறைக்க முயற்சிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், தேசிய நிதி ஆணையத்தின் கீழ் 2026-27 நிதியாண்டில் மாகாணங்கள் 10,350 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களைப் பெறும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2025-26 நிதியாண்டில் ரூ. 8,921 பில்லியனாகவும், 2026-27க்குள் ரூ. 10,350 பில்லியனாகவும் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பதை இது காட்டுகிறது.

Exit mobile version