Site icon Tamil News

அணு ஆயுத ஏவுகணைகளை ஈரானுக்கு வழங்க பாகிஸ்தான் திட்டம் ; பதிலடி கொடுத்த அமெரிக்கா

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரானுடனான இடையிலான மோதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் ஷஹீன் II எனப்படும் தொலைதூர தூர பாலிஸ்டிக் அணு ஆயுத ஏவுகணைகளை ஈரானுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அணு ஆயுதங்களை ஈரான் உருவாக்கும் பட்சத்தில்.. அதை பாகிஸ்தானின் இந்த ஏவுகணையை பயன்படுத்தி இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை தாக்க முடியும். செங்கடலில் இருக்கும் அமெரிக்காவின் போர் கப்பல்களையும் கூட இதன் மூலம் ஈரான் தாக்க முடியும்.

ஈரானுக்கு ஏவுகணைகளை அனுப்ப பாகிஸ்தான் முன்வந்ததாக வெளியான செய்திக்கு அமெரிக்கா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், “இஸ்ரேலுக்கான எங்கள் ஆதரவில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம், மேலும் இஸ்ரேல் தங்களைத் தற்காத்துக் கொள்ள எல்லா உரிமையும் உள்ளது. அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். ஈரானுக்கு ஏவுகணைகளை அனுப்படுவது தவறான முடிவு.. இதை எந்த நாடு செய்தாலும் நிலைமையை மோசமாக்கவே செய்யும், என்று கூறி உள்ளார்.

Exit mobile version