Site icon Tamil News

இந்திய – இலங்கை நில இணைப்பு!! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நில இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அதிகாரத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பை மேலும் விவாதிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னாருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version