Site icon Tamil News

திருகோணமலையில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

திருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலினால் சேறுநுவர கல்வல சந்தியில் வசித்து வந்த எம்.ஜீ. சஞ்சீவ கருணாரத்ன (41வயது) எனவும் தெரிய வருகின்றது.

அனுராதபுரம் கண்னேவ பகுதியில் வசித்து வந்த சம்பிகா குமாரி என்பவர் திருமணம் செய்திருந்த வேளையில் கணவரை விட்டு பிரிந்து சேறுநுவர பகுதியில் மற்றுமொரு நபருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் முதலாவது கணவர் மனைவியை தேடி வந்து மனைவியுடன் வாழ்ந்து வந்த குறித்த நபரை கத்தியால் குத்தியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த குறித்த நபரின் சடலம் சம்பவ இடத்தில் காணப்படுவதுடன், சடலத்தை பார்வையிட சம்பவ இடத்திற்கு மூதூர் நீதவான் வருகை தர உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கத்தி குத்து தொடர்பில் விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version