Site icon Tamil News

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்கீழ் ஜுலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் குறித்த அறிவிப்பு!

அஸ்வசும நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட 257,170 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

1,550 மில்லியன் ரூபா வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய(08.09) தினம் பயனாளிகளின் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிவாரணப் பயன் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஜூலை மாதம் 790,000 பயனாளி குடும்பங்களுக்கு பணம் செலுத்தப்பட்டது. இதில் 48,170 மில்லியன் குடும்பங்கள் பயனடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version