Site icon Tamil News

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு

ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி தேர்தல் திகதிகளை ஆணையம் அறிவிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டியில் இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையம் எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை இத்தேர்தலுக்கு பயன்படுத்த முடியும் என சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

Exit mobile version