Site icon Tamil News

வருடத்திற்கு 12 இலட்சத்திற்கும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெருபவர்கள் வருமான வரியை செலுத்துவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய வருமான வரி திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பதிவுப் பிரிவிற்கு நேரடியாக வருகை தந்தோ www.ird.gov.lk  என்ற  இணையதளத்தின் ஊடாகவோ  தமது ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் கிளைகளிலும் இவற்றை கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version