Site icon Tamil News

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வடகொரியா ஜனாதிபதி வலியுறுத்தல்

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை “அதிவேகமாக” அதிகரிக்க அணுசக்தி கட்டுமானக் கொள்கையை நாடு இப்போது செயல்படுத்தி வருவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் நிறுவன ஆண்டு விழாவில் கிம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட கொரியா தனது அணுசக்தித் திறனையும், எந்த நேரத்திலும் அதைச் சரியாகப் பயன்படுத்தத் தயாராக இருப்பதையும், அரசின் பாதுகாப்பு உரிமைகளை உறுதி செய்வதில் இன்னும் முழுமையாகத் தயார் செய்ய வேண்டும் என்று கிம் குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்களை” எதிர்கொள்ள வலுவான இராணுவ பிரசன்னம் தேவை என்று கிம் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version