Site icon Tamil News

வடகொரிய செயற்கைக்கோள் விவகாரம் : “கண் திறக்கும் நிகழ்வு” என விமர்சனம்!

வட கொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாக கூறியுள்ளது. இதற்கு மற்ற நாடுகள் ஐ.நா தீர்மானத்தை மீறியதாக கண்டனம் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் தலைவர் கிம், இந்த ஏவுதல், விரோதப் படைகளின் “ஆபத்தான மற்றும் ஆக்ரோஷமான” நகர்வுகளை எதிர்கொள்ளும் ஒரு “கண் திறக்கும் நிகழ்வு” என்று கூறினார்.

“உளவு செயற்கைக்கோளை வைத்திருப்பது டிபிஆர்கே ஆயுதப்படைகளால் தற்காப்பு உரிமையின் முழு அளவிலான செயல்பாடு என்று அவர் கூறினார்.

அத்துடன் இந்த செயற்கைக்கோள் வட கொரிய இராணுவத்தை “உலகின் சிறந்த இராணுவமாக உலகம் முழுவதையும் தாக்கும் திறன் கொண்டதாக” உருவாக்கும் என்று கூறினார்.

Exit mobile version