Site icon Tamil News

குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா!

வடகொரியா தனது கிழக்குக் கடற்பகுதியை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று (15) ஏவியது.

அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா மேற்படி ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரிய இராணுவம், தென் கொரிய-அமெரிக்க நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதன் ஆயுத சோதனை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாகக் வடகொரியா தெரிவித்துள்ளது.

மே மாத இறுதியில் தனது முதல் உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த பின்னர் வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை வந்துள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனையை  கண்டறிந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் கூறினார்.

இதற்கிடையே தென் கொரியாவின் இராணுவம் அதன் கண்காணிப்பு நிலையை அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

Exit mobile version