Site icon Tamil News

கப்பல் ஏவுகணைகளை பரிசோதனை செய்த வடகொரியா!

வடகொரியா கொரிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில், பல கப்பல் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

ஏவுதல் பற்றிய கூடுதல் விவரங்கள் தென் கொரிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

சமீபகாலமாக வடகொரிய அதிகளவிலான நீண்ட மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version