270 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நுரைச்சோலை நிலக்கரிமின் நிலையத்தின் ஒரு அலகு இன்று அதிகாலை பழுதடைந்துள்ளது.
ஆலையில் உள்ள மூன்று மின் உற்பத்தி அலகுகளில், தற்போது ஒன்று மட்டுமே இயங்கி வருகிறது
பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜூன் மாதத்தில் மற்றுமொரு யூனிட் (270MW) நிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.