Tamil News

நோர்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கனா நோபல் பரிசு அறிவிப்பு

2023-ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாக கருதப்படுவது நோபல் பரிசுகள். ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய 6 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

Norwegian author Jon Fosse wins the Nobel Prize in literature : The Tribune  India

இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை நோபல் கமிட்டி இன்று அறிவித்தது. அதன்படி நோர்வையைச் சேர்ந்த ஜான் ஃபோஸ் என்பவருக்கு இவ்வாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் எழுதிய ‘for his innovative plays and prose which give voice to the unsayable’ என்ற புத்தகத்துக்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் இன்னும் அறிவிக்கப்பட உள்ளது.

Exit mobile version