Site icon Tamil News

கல்வி பொதுத்தராதர பரீட்சையில் எந்தவொரு மாணவரும் சித்தியடையமாட்டார் – கல்வி அமைச்சர்!

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் எந்தவொரு மாணவரும் சித்தியடைய மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அவர்கள் படிப்பு அல்லது தொழில் பயிற்சியுடன் மேலும் இரண்டு ஆண்டுகள் பள்ளியில் படிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

மின்சார துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரித்தானிய ஆட்சியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறையே இலங்கையில் இன்றும் காணப்படுவதாகவும், பிரித்தானியாவில் கூட இவ்வாறான பாடத்திட்டங்கள் இன்று காணப்படவில்லை எனவும், அதற்கமைவாக கல்வியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version