Site icon Tamil News

அவுஸ்திரேலியாவை நோக்கி படையெடுக்கும் நியூசிலாந்து நாட்டினர்

6 வாரங்களுக்குள் 15,000 க்கும் மேற்பட்ட நியூசிலாந்து நாட்டினர் அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு தினமும் சுமார் 375 நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியா கடந்த ஜூலை 1ஆம் திகதி புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியதையடுத்து, நியூசிலாந்து நாட்டினர் அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்வது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குழுவில், சுமார் 500 பேர் ஏற்கனவே குடியுரிமைக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்,

மேலும் அவர்கள் நாட்டில் நடைபெறவிருக்கும் விழாவில் அவுஸ்திரேலிய குடிமக்களாக மாறுவார்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் கூறுகின்றன.

Exit mobile version