Site icon Tamil News

03 நாட்களுக்குகள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை விரைவில் அமுலுக்கு வரும்!

03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்கும் வகையில் மேலும் 50 இடங்களை இணைத்து இதனை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

இதேவேளை, இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை இன்று அழைக்கப்படவுள்ளதாகவும், இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்துடன் கலந்தாலோசித்து மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அலஸ் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version