Site icon Tamil News

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இந்தோனேசியாவின் புதிய ஜனாதிபதி

இந்தோனேசியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் உயரத்திற்கு மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டார்.

மேலும், பிரதமர் மோடியுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

சமூக ஊடகமான ‘X’ இல் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ள ஜனாதிபதி சுபியாண்டோ, “பிரதமர் @narendramodi, எங்கள் தேர்தல்களுக்கு உங்கள் வாழ்த்துச் செய்திக்கு நன்றி. இந்தோனேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் உயரத்திற்கு வலுப்படுத்துவதற்கான உங்கள் உணர்வைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என பதிவிட்டிருந்தார்.

மேலும், இந்தோனேசியாவில் அதிபர் தேர்தல் வெற்றியடைய அந்நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Exit mobile version