Site icon Tamil News

தற்காலிகமாக மூடப்படும் புதிய களனி பாலம்

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக புதிய களனி பாலம் போக்குவரத்துக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

புதிய களனி பாலம் நாளை (டிசம்பர் 01) முதல் மூன்று கட்டங்களாக போக்குவரத்துக்கு மூடப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

கட்டம் 01 – டிசம்பர் முதலாம் திகதி காலை 9.00 மணி முதல் டிசம்பர் 04ஆம் திகதி காலை 6.00 மணி வரை

கட்டம் 02 – டிசம்பர் 08ஆம் திகதி காலை 9.00 மணி முதல் டிசம்பர் 11ஆம் திகதி காலை 6.00 மணி வரை

கட்டம் 03 – டிசம்பர் 15ஆம் திகதி காலை 9.00 மணி முதல் டிசம்பர் 18ஆம் திகதி காலை 6:00 மணி வரை.

இந்நிலையில். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version