Site icon Tamil News

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை வருகை

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

அவர் கோபால் பாக்லேக்குப் பிறகு தனது கடமைகளை நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஶ்ரீ சந்தோஷ் ஜா இதற்கு முன்னர் பெல்ஜியத்திற்கான இந்திய தூதுவராக கடமையாற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version