Site icon Tamil News

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் புதிய நெருக்கடி – கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கும் வீரர்களுக்கு Covid-19 நோய் தொற்று அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

40க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு Covid-19 நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் Covid-19 நோய்ச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை இது காட்டுவதாக உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அந்நோய் இன்னும் பரவுவதாகவும் நாடுகள் அதைச் சமாளிக்கும் முறையை மேம்படுத்தவேண்டும் என்றும் நிறுவனம் கூறியது.

பிரித்தானிய நீச்சல் வீரர் ஆடம் பீட்டியும் (Adam Peaty) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லானி பாலிஸ்டரும் (Lani Pallister) Covid-19 நோயால் பாதிக்கப்பட்டனர்.

84 நாடுகளிலிருந்து பெற்ற தகவல்கள் Covid-19 நோய்ச்சம்பவங்கள் அதிகரிப்பதைக் காட்டுகின்றன.

தெரிவிக்கப்படும் புள்ளிவிவரங்களைவிட 2 இலிருந்து 20 மடங்கு வரை அதிகமாக Covid-19 நோய்ச்சம்பவங்கள் பரவுவதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version