Site icon Tamil News

வங்காளதேச அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் 9-வது இயக்குநர்கள் கூட்டம் மிர்பூரில் இன்று நடைபெற்றது.

இதில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

வங்காளதேச கிரிக்கெட் அணியின் அனைத்து விதமாக போட்டிகளுக்கும் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தேசிய அணியின் தலைமை தேர்வாளராக காசி அஷ்ரப் ஹொசைன் லிபு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஷகிப்புடன் பேசினோம். அவருக்கு கண் பிரச்சனைகள் இன்னும் இருக்கின்றன. அது அவர் தேசிய அணிக்கு கிடைப்பதை நிச்சயமற்றதாக்குகிறது. இல்லையெனில், எல்லா வடிவங்களிலும் கேப்டனாக இருப்பதற்கான எங்கள் முதல் தேர்வாக அவர் இருந்திருப்பார்.

மேலும், வீரர்களின் இருப்பைப் பொறுத்து துணை கேப்டன் பதவி தீர்மானிக்கப்படும், தொடருக்குத் தொடர் மாறுபடும்.

Exit mobile version