Tamil News

ஜெய்லர் – 2 படத்திற்கு முதல் ஆளாக பெரிய நடிகரை பிடித்த நெல்சன்

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணி முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

கடந்த ஆண்டு திரைக்கு வந்த ஜெயிலர் அதிக வசூல் அள்ளி சாதனை படைத்திருந்தது.

ஜெயிலர் படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு அனிருத்தின் பின்னணி இசையும் முக்கிய காரணம். இதை ரஜினிகாந்தே ஒரு விழாவில் கூறி இருந்தார்.

அந்த நிலையில், ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

ஜெயிலர் 2 படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை இயக்குனர் நெல்சன் மேற்கொண்டு வருகிறார். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்திற்கு ஹுகும் என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது ஜெயிலர் 2 படத்தில் மாஸ் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கும் தகவலும் கசிந்துள்ளது. அந்த நடிகரை ஜெயிலர் முதல் பாகத்திலேயே நடிக்க வைக்க ஆசைப்பட்டிருந்தார் இயக்குனர் நெல்சன்.

அவர் வேறு யாருமில்லை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான். ஜெயிலர் முதல் பாகத்திலேயே அவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நெல்சன் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அந்த சமயத்தில் அவர் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.

அதனால் ஜெயிலர் 2-ம் பாகத்தில் பாலய்யாவை முதல் ஆளாக கமிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணா ரஜினியின் நண்பர் என்பதை தாண்டி, அவருக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version