Site icon Tamil News

ஈரானில் இயற்கை எரிவாயு குழாய் தாக்குதல் : இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு!

ஈரானிய இயற்கை எரிவாயு குழாய் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் காரணமாகவுள்ளதாக ஈரானின் எண்ணெய் அமைச்சர் ஜாவத் ஓவ்ஜி தெரிவித்துள்ளார்.

எதிரியின் தீய செயல் மற்றும் சதி சரியாக நிர்வகிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவருடைய இந்த கருத்துக்களுக்கு எவ்வித ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை.

வெளிநாட்டில் உளவுப் பணிகளை மேற்கொண்டதாக இஸ்ரேல் கூறினாலும், தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version