Site icon Tamil News

ஐரோப்பாவில் பதற்ற நிலையை அதிகரிக்கும் முயற்சியில் நேட்டோ

ஐரோப்பாவில் பதற்றநிலையை அதிகரிக்க நேட்டோ கூட்டணித் தலைவர் யென்ஸ் ஸ்டோல்ட்டன்பர்க் முயற்சி செய்வதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.

கூட்டணி, கூடுதல் அணுவாயுதங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது பற்றிப் பேச்சு நடத்துவதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.

மொஸ்கோவின் குற்றச்சாட்டுகளுக்குத் பதில் அளித்த ஸ்டோல்ட்டன்பர்க், ஐரோப்பாவில் கூட்டணி ஈடுபடுத்தியிருக்கும் அணுவாயுதங்களை நவீனமாக்குவதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததாக கூறியுள்ளார்.

ரஷ்ய அரசாங்கம் குழப்பத்தை உண்டாக்கப் பார்ப்பதாக ஸ்டோல்ட்டன்பர்க் குறிப்பிட்டார்.

அணுவாயுதங்களைப் பற்றிக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version