Site icon Tamil News

உக்ரேனுக்கான இராணுவ ஆதரவு தொடர்பில் நேட்டோ விடுத்துள்ள அழைப்பு

உக்ரைனுக்கான இராணுவ ஆதரவில் இடைவெளிகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை மேற்கத்திய நட்பு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். .

பின்லாந்து விஜயத்தின் போது ஸ்டோல்டன்பெர்க் பேசுகையில், உக்ரைனுக்கு நேட்டோ நட்பு நாடுகளிடமிருந்து இராணுவ ஆதரவின் அடிப்படையில் “முன்கணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல்” தேவை என்றார்.

மேலும் “கடந்த மாதங்களில் நாங்கள் உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை வழங்குவதில் சில இடைவெளிகளையும், சில தாமதங்களையும் கண்டோம்,” என்று ஃபின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப்புடன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version