Site icon Tamil News

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஏற்கும் நாமல்!

நாட்டின் பொது மக்களை புறக்கணிக்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற தொகுதி கூட்டமொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “நாட்டிற்கு பாதகமான அரசியல் தீர்மானத்தை நாம் ஒருபோதும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் அபிவிருத்தியை நிறுத்திய இடத்தில் இருந்து நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதே எனக்குள்ள பொறுப்பும் சவாலும் என நான் கருதுகின்றேன்.

சிறிய மற்றும் இன்றைய அரசாங்கம் வரம்பற்ற அநீதியான வரிக் கொள்கையை அமுல்படுத்துகிறது.  இந்த நாட்டு மக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய வரிக் கொள்கையை அமுல்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version