Tamil News

சமந்தாதான் மருமகள்.. புலம்பித் தள்ளும் நாக சைதன்யாவின் தாய்?

நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா முதலில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிவடைந்தது. இதனையடுத்து சிறிது காலம் சிங்கிளாக இருந்த சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

அவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தச் சூழலில் அவர் குறித்தும் அவரது தாய் குறித்தும் புதிய தகவல் ஒன்று உலாவுகிறது.

திருமண முறிவுக்கு பிறகு நாக சைதன்யா படங்களில் பிஸியாகியிருக்கிறார். சமந்தாவும் அப்படியே. சூழல் இப்படி இருக்க நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துவந்தார்.

அவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாகார்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் விரைவில் இருவருக்குமான திருமணம் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது. அதாவது நாக சைதன்யாவின் தாயான லட்சுமிக்கு சோபிதா – நாக சைதன்யா நிச்சயதார்த்தம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதுமட்டுமின்றி தனக்கு நெருக்கமானவர்களிடம், மருமகள் என்றால் அது சமந்தாதான். அவர் தங்கமானவர். முக்கியமாக தனது முன்னாள் கணவர் வளர்ப்பினால்தான் தனது மகனும் அவர் வழியிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். விவாகரத்தின் வலி தனக்கு தெரியும். இதில் சமந்தாவின் தவறு எதுவுமே இல்லை. அதனால்தான் நாக சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தத்துக்கு செல்லவில்லை; திருமணத்துக்கும் செல்லப்போவதில்லை என்று புலம்பித்தள்ளிவருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை.

காரணம் நாகசைதன்யா மற்றும் சோபிதாவின் நிச்சயத்திற்கு அவரது தாய் வந்திருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

இதையடுத்து மேற் குறிப்பிட்ட செய்தியில் உண்மைத்தன்மை இல்லை என்றுதான் யோசிக்கத்தோன்றுகின்றது.

Exit mobile version