Site icon Tamil News

கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற மர்மப் பொதி!

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு  கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை சோதனையிட்டபோது அதில் குஷ் போதைப்பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியில் 600 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த பொதியை எடுத்துச் செல்ல வந்த நபர் ஒருவரை சுங்க அதிகாரிகள் உரிய சோதனையை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய்  எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version