Site icon Tamil News

மெக்சிகோவில் கட்டுமானத் தளத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்கள்!

மெக்சிகோவின் வன்முறை மாநிலமான குவானாஜுவாடோவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

ஒரே மாதத்தில் நடந்த இரண்டாவது படுகொலை சம்பவம் இதுவாகும்.

குவானாஜுவாடோ மற்றும் பிற மாநிலங்களில் போதைப்பொருள் விற்பனையாளர்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பெரும்பாலும் குடும்ப பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் யூரிரியா பகுதியில் கட்டுமான தளத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த ஆறு பேர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவானாஜுவாடோவின் வழக்குரைஞர் அலுவலகம் கொலைகள் குறித்து விசாரித்து வருவதாகக் கூறியது, ஆனால் இதுவரை எந்த சந்தேக நபர்களையும் கைது செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version