Tamil News

இயக்குனர் சேரன் வீட்டில் நிகழ்ந்த துக்கம்: திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சேரனின் தந்தை பாண்டியன் என்பவர் அவரது சொந்த கிராமத்தில் இன்று காலமானார்.

84. வயதில் அவர் காலமாகியுள்ளார்.

அவரது சொந்த கிராமம் பழையூர் பட்டி என்ற ஊரில் தியேட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தந்தை மறைவை அடுத்து அவரது இறுதி சடங்கு செய்வதற்கு சேரன் தனது குடும்பத்துடன் பழையூர்பட்டி என்ற அவரது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சேரனின் தந்தை காலமானதை அடுத்து திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version