Site icon Tamil News

பொத்துவில் குறினியாங்கோடு பகுதியில் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் – இருவர் பலி!

பொத்துவில் குறினியாங்கோடு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பொத்துவிலிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 மற்றும் 77 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version