Site icon Tamil News

மகளுக்கு சூடு வைத்த தாய் கைது

முன்பள்ளிக்கு செல்ல மறுத்த 5 வயது மகளை சூடு வைத்த தாயை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி, நாகஸ்தான பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த 30 வயதுடைய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் உடலை கரண்டியால் சூடாக்கி சுட்டுவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுமி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுமியின் உடலில் 04 இடங்களில் தீக்காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version