Site icon Tamil News

பிரித்தானியாவின் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் மரணம்

பிரித்தானியாவின் பிராட்போர்டில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

29 வயதான Bryony Gavit மற்றும் அவரது 09 வயது மகள் Denise Burtle, 05 வயது மகன் Oscar Burtle மற்றும் இளைய மகள் Aubree Burtle ஆகியோர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 39 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்கு யார்க்ஷயர் பொலிஸாரின் துப்பறியும் பிரிவுகள், தீ வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 1.45 மணியளவில் வீடு தீப்பற்றி எரிந்ததாகவும் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பொலிஸாரின் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதாகவும் வீட்டிற்கு அருகில் இருந்த அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மூன்று குழந்தைகளில் இளையவரான ஆப்ரே, தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு இந்த சோகமான சம்பவத்தை சந்தித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளதுடன், நண்பர்கள் மலர்களை வைத்து கவலைகளை வெளியிட்டுள்ளனர்.

 

Exit mobile version