Site icon Tamil News

பிரித்தானியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இரத்து!

பிரித்தானியாவில் ஈஷா புயல் காரணமாக  பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் இருந்ததாகவும் இன்று (22.01)  நூற்றுக்கணக்கான ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய குளிர்கால புயல்கள் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் கடுமையான மழை மற்றும் மணிக்கு 100 மைல் (160 கிலோமீட்டர்) வேகத்தில் காற்று வீசுவதற்கும் வலிவகுத்துள்ளது.

ஒரே இரவில் அதன் உச்சத்தை எட்டிய ஈஷா புயல் பல்வேறு முன்னறிவிப்பு எச்சரிக்கைகளை கொண்டுள்ளது.

இதன்படி இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள பிரிஸ்லீ வூட் ரேடார் நிலையத்தில் மணிக்கு 99 மைல் வேகத்தில் காற்று வீசிதாக கூறப்படுகிறது.

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவம் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

Exit mobile version