Site icon Tamil News

இஸ்ரேல் தாக்குதலில் 13000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி – யுனிசெப்

ஐ.நா குழந்தைகள் நிறுவனம்,இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் 13,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது,

பல குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் “அழுவதற்கு கூட ஆற்றல் இல்லை” என்று தெரிவிக்கபட்டது.

“இன்னும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் அல்லது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை. அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம்.” என்று யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் கூறினார்.

“கடுமையான இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வார்டுகளில் நான் இருந்தேன், வார்டு முழுவதும் முற்றிலும் அமைதியாக இருக்கிறது. ஏனென்றால் குழந்தைகள் அழுவதற்கு கூட ஆற்றல் இல்லை.” என்று தெரிவித்தார்.

Exit mobile version