Site icon Tamil News

1 லட்சம் ரூபாய் இருந்த பையை தூக்கி கொண்டு மரத்திலேறிய குரங்கு!

லக்னோவில் வாலிபர் பைக்கில் இருந்த ரூ.1 லட்சம் இருந்த பையை குரங்கு ஒன்று திருடியது.உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஷஹாபாத்தில் உள்ள திராதாராவில் உள்ள பதிவு அலுவலகத்திற்கு வந்த ஒரு நபரின் பைக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கொண்ட பையை குரங்கு ஒன்று திருடியது கமெராவில் சிக்கியது.பலத்த முயற்சிக்கு பின் மரத்தின் மீது ஏறி சென்ற குரங்கிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய பை மீட்கப்பட்டது. நோட்டு சேதமடையாததால் பைக் ஓட்டுபவர் நிம்மதி அடைந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை ஷராபத் ஹுசைன் எனும் நபர் திராதாராவில் உள்ள பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பையில் ஒரு லட்சம் ரூபாய் இருந்துள்ளது. பைக்கை நிறுத்திவிட்டு கணக்குகளை சரிபார்த்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்போது பைக்கில் இருந்து பையுடன் குரங்கு மரத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தது. பையில் உணவு இருக்கும் என்று எண்ணிய குரங்கு, பையுடன் மரத்தின் மீது ஏறி மறைந்தது.

இந்த நேரத்தில்தான் பைக்கில் ஒரு பை இருந்தது உசேனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே பையை எடுக்கச் சென்றபோது பையை யாரோ எடுத்துச் சென்றதை உணர்ந்தார். பைக் பக்கத்தில் ஒரு குரங்கு அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது.

குரங்கு காணாமல் போனதையடுத்து, பையை எடுத்துச் சென்றிருக்கலாம் என கருதி குரங்கை தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இறுதியாக நீண்ட முயற்சிக்கு பின் குரங்கிடம் இருந்து பணபை மீட்கப்பட்டது.

Exit mobile version