Site icon Tamil News

ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பண மோசடி! பெண்ணொருவர் கைது

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண், ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து, 10 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு, வேலைவாய்ப்பை பெற்றுத்தரவில்லை என, பாதிக்கப்பட்ட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பணியக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மினுவாங்கோடை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Exit mobile version