Site icon Tamil News

இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமரான மோடி – பதவியேற்பு விழா ஏற்பட்ட மர்மம்

இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவின் போது ராஷ்டிரபதி பவனின் மேடைக்கு பின்னால் மர்ம விலங்கு நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. பாஜக எம்பிக்கள் துர்காதாஸ் உகே மற்றும் அஜய் தம்தா ஆகியோர் பதவியேற்றனர்

இந்த நிகழ்வின் போது இந்த மர்ம உயிரினம் படிக்கட்டுகளில் பலமுறை காணப்பட்டதாகவும் அது ஆர்வமூட்டுவதாகவும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலங்கு தனது சொந்த இடத்தில் வாழும் விலங்கு என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து 8,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர்.

Exit mobile version