Tamil News

சார்ஜ் செய்து கொண்டிருந்தபோது வெடித்த மொபைல் போன் – மூவருக்கு தீக்காயம்

சார்ஜ் போட்டு வைத்திருந்த மொபைல் போன் வெடித்து சிதறியதில் 3 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பில், வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உடைந்தன.

நாசிக் மாவட்டம் உத்தம் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெடிவிபத்தில் தீக்காயம் அடைந்த 3 பேர் சிறப்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்யும் போது அருகில் வைத்திருந்த வாசனை திரவியப் போத்தல் விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிவிபத்து மிகவும் பெரியதாக இருந்ததால், வீட்டின் ஜன்னல்கள் மட்டுமின்றி, வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளும் உடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version