Site icon Tamil News

அமெரிக்காவின் கொள்கலன் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க கொள்கலன் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யேமன் கடற்பகுதியில் ஏடன் வளைகுடா கடல் பகுதியில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலால் கப்பலின் சரக்கு பெட்டி சிறிது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எஃகு பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version