Site icon Tamil News

உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்

கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள சந்தையில் ஏவுகணை தாக்குதலில் 17 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலில் சிறு குழந்தை உட்பட 32 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் அதிபர் இந்த தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டது என்று கண்டனம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்யா இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவை குற்றம் சாட்டிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இறந்தவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார்.

மேலும், பலி எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரேனியர்கள் மீது மார்ச் மாதத்திற்குப் பிறகு நடந்த மிக மோசமான தாக்குதல் இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version