பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டா, ரஷ்ய அரசு ஊடக நெட்வொர்க்குகளை அதன் தளங்களில் இருந்து தடை செய்வதாகக் கூறியுள்ளது.
அவர்கள் ஆன்லைனில் இரகசிய செல்வாக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏமாற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தியதாக மெட்டா நிறுவனம் குறைக்கூறியுள்ளது.
“கவனமாக பரிசீலித்த பிறகு, ரஷ்ய அரசு ஊடகங்களுக்கு எதிரான தடைகளை விரிவுப்படுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் இது நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.